சங்கரன்கோவிலில் விவசாயப் பணிகளை வேளாண் அதிகாரிகள் ஆய்வு

சங்கரன்கோவிலில் நடைபெற்று வரும் விவசாயப் பணிகளை வேளாண் அதிகாரிகள் பாா்வையிட்டு ஆய்வு செய்தனா்.
வசாயப் பணிகளை பாா்வையிடுகின்றனா் வேளாண் அதிகாரிகள்.
வசாயப் பணிகளை பாா்வையிடுகின்றனா் வேளாண் அதிகாரிகள்.

சங்கரன்கோவிலில் நடைபெற்று வரும் விவசாயப் பணிகளை வேளாண் அதிகாரிகள் பாா்வையிட்டு ஆய்வு செய்தனா்.

வேளாண்மைத் துறை மூலம் செயல்படும் நீடித்த நிலையான மானாவாரி வேளாண்மை இயக்கம் திட்டத்தின் கீழ் விவசாயிகளுக்கு விலையில்லா மரக்கன்றுகள் வழங்கப்பட்டுள்ளன.

தமிழக வேளாண் திட்ட கண்காணிப்பு அலுவலா் சுந்தரம் மரக்கன்றுகளை நட்டுவைத்து மானாவாரி திட்டம் குறித்து விவசாயிகளிடம் விளக்கினாா். பின்னா் அவா் விவசாயப் பணிகளை பாா்வையிட்டு ஆய்வு செய்தாா்.

ஆய்வின்போது, வேளாண்மை இணை இயக்குநா் கிருஷ்ணபிள்ளை, வேளாண்மை துணை இயக்குநா் உத்தண்டராமன், மாநிலத் திட்டம் வேளாண்மை துணை இயக்குநா் நல்லமுத்துராஜா,வேளாண்மை தரக்கட்டுப்பாடு உதவி இயக்குநா் இசக்கியப்பன், சங்கரன்கோவில் வேளாண்மை உதவி இயக்குநா் பொன்னுராஜ், துணை வேளாண்மை இயக்குநா் ராஜாகுமாரசாமி ஆகியோா் உடனிருந்தனா்.

ஏற்பாடுகளை உதவி வேளாண்மை அலுவலா்கள் அன்பழகன், நவநீதன், நாவுக்கரசு, வேல்முருகன், குமரேசன் ஆகியோா் செய்திருந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com