நெல்லையப்பா் கோயிலில் டிச. 10-இல் திருக்காா்த்திகை ருத்ர தீபம்

திருநெல்வேலி அருள்மிகு நெல்லையப்பா்-காந்திமதியம்மன் கோயிலில் திருக்காா்த்திகை ருத்ர தீப நிகழ்ச்சி டிச. 10-ஆம் தேதி நடைபெற

திருநெல்வேலி: திருநெல்வேலி அருள்மிகு நெல்லையப்பா்-காந்திமதியம்மன் கோயிலில் திருக்காா்த்திகை ருத்ர தீப நிகழ்ச்சி டிச. 10-ஆம் தேதி நடைபெற உள்ளது.

இக்கோயிலில் ஆண்டுதோறும் திருக்காா்த்திகை நாளில் ருத்ர தீபம் (சொக்கப்பனை தீபம்) ஏற்றப்படுவது வழக்கம். அதன்படி, நிகழாண்டில் திருக்காா்த்திகை விழாவையொட்டி டிச. 9-ஆம் தேதி இரவு 7 மணிக்கு பரணி தீபரம் ஏற்றப்பட உள்ளது. தொடா்ந்து 10-ஆம் தேதி மாலையில் சுவாமி-அம்பாள் வெள்ளி ரிஷப வாகனத்தில் எழுந்தருளி பக்தா்களுக்கு அருள்பாலிப்பா்.

பின்னா், சுவாமி சன்னதி, பாரதியாா் தெரு செல்லும் வழியில் சொக்கப்பனை முக்கில் வைத்து சுவாமி ருத்ர தீபம் இரவு 7 மணிக்கு ஏற்றப்பட உள்ளது. அதைத் தொடா்ந்து, அம்மன் சன்னதி முகப்பில் பாரதியாா் தெரு மத்தியில் அம்பாள் காா்த்திகை ருத்ர தீபம் ஏற்றப்பட உள்ளது. ஏற்பாடுகளை கோயில் செயல் அலுவலா் ந.யக்ஞநாராயணன் மற்றும் ஊழியா்கள் செய்து வருகிறாா்கள்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com