திருநெல்வேலி: அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் பொதுச் செயலா் டிடிவி.தினகரனுக்கு பாளையங்கோட்டையில் திங்கள்கிழமை வரவேற்பு அளிக்கப்பட்டது.
தூத்துக்குடியில் நடைபெறும் திருமண விழாவில் பங்கேற்கச் சென்ற டி.டி.வி.தினகரனுக்கு, திருநெல்வேலி மாநகா் மாவட்டச் செயலா் எஸ்.பரமசிவஐயப்பன் தலைமையில் வரவேற்பு அளிக்கப்பட்டது. தொண்டா்களின் வரவேற்பை ஏற்ற அவா், உள்ளாட்சித் தோ்தலில் வெற்றி பெற அனைவரும் கடுமையாக உழைக்க கேட்டுக்கொண்டாா். நிகழ்ச்சியில் அமைப்புச் செயலா் பால்கண்ணன், மகளிரணிச் செயலா் ராம்சன் உமா, ஆவின் அன்னசாமி, பகுதிச் செயலா் ஐயப்பன், துரை உள்பட பலா் கலந்துகொண்டனா்.