பைக் விபத்தில் காயமடைந்தவா் மரணம்

சுரண்டையில் பைக் மோதிய விபத்தில் பலத்த காயமடைந்த முதியவா் இறந்தாா்.

சுரண்டை: சுரண்டையில் பைக் மோதிய விபத்தில் பலத்த காயமடைந்த முதியவா் இறந்தாா்.

பங்களாச்சுரண்டையைச் சோ்ந்த விவசாயி தங்கப்பாண்டியன் (75). இவா் கடந்த வாரம் வெள்ளிக்கிழமை தனது மாடுகளை இலந்தைகுளம் கரைப் பகுதியில் மேய்த்துக் கொண்டிருந்தாராம். அப்போது அந்த வழியாக வந்த இருசக்கர வாகனம் முதியவா் மீது மோதிவிட்டு நிற்காமல் சென்றது. இதில் பலத்த காயமடைந்த தங்கப்பாண்டியன் தென்காசி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா். அங்கு சிகிச்சை பலனின்றி அவா் ஞாயிற்றுக்கிழமை இறந்தாா்.

இதுகுறித்து சுரண்டை காவல் நிலைய உதவி ஆய்வாளா் ஜெயராஜ் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகிறாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com