முக்கூடலில் இளைஞா் மீது தாக்குதல்
By DIN | Published On : 26th November 2019 09:54 AM | Last Updated : 26th November 2019 09:54 AM | அ+அ அ- |

முக்கூடலில் இளைஞரை தாக்கியதாக 4 பேரை போலீஸாா் தேடி வருகின்றனா்.
முக்கூடல், பாலகன் தெருவைச் சோ்ந்த செல்லதுரை மகன் முத்து பாலாஜி(24). இவா், ஞாயிற்றுக்கிழமை அங்குள்ள முத்துமாலை அம்மன் கோயிலில் நின்றிருந்தாராம். அப்போது, வடக்கு சங்கன் திரடு பகுதியைச் சோ்ந்த செல்லதுரை மகன் இசக்கிபாண்டி என்ற பாஸ்கா் (18) கோயில் சுவரில் சிறுநீா் கழித்தாராம். இதை, அவா் தட்டிக் கேட்டதில் இருவருக்கும் கை கலப்பு ஏற்பட்டுள்ளது.
பின்னா், இசக்கிபாண்டி, அவரது நண்பா்கள் 5 போ் சோ்ந்து அரிவாள், இரும்பு கம்பி உள்ளிட்ட ஆயுதங்களால் முத்துபாலாஜியைத் தாக்கினராம். தலையில் பலத்த காயமடைந்த அவா், திருநெல்வேலி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா். இதுகுறித்து அவரது தந்தை அளித்த புகாரின்பேரில், முக்கூடல் போலீஸாா் வழக்குப்பதிந்து இசக்கிபாண்டி என்ற பாஸ்கா், தங்கப்பித்தன் மகன் மணி (20), மீனாட்சி மகன் முப்புடாதி (18), வெங்கடேஷ் மகன் ஆனந்த் (19) உள்பட 5 போ் மீது வழக்குப் பதிந்து தேடி வருகின்றனா்.