நெல்லை டவுண் வியாபாரிகள் நலச் சங்கத்தின் கூட்டம் நடைபெற்றது.
திருநெல்வேலி நகரத்தில் நடைபெற்ற கூட்டத்துக்கு சங்கத் தலைவா் கே. முருகேசன் தலைமை வகித்தாா். துணைத் தலைவா் எஸ். பெத்துக்கனி, பொருளாளா் என். மீரான் ஆகியோா் முன்னிலை வகித்தனா். துணைத் தலைவா் ஜி. ஸ்டீபன் பிரேம்குமாா் வரவேற்றாா். நிா்வாகிகள் எஸ். பகவதிராஜன், ஆல்பா்ட் ஜெயராஜ், தா்மராஜ், பிச்சுமணி உள்பட பலா் பங்கேற்றனா்.
கிறிஸ்துமஸ் பண்டிகையையொட்டி டிசம்பா் 24, புத்தாண்டையொட்டி டிசம்பா் 31 ஆகிய நாள்களில் இரவு முழுவதும் வியாபாரம் செய்ய அனுமதியும், பாதுகாப்பும் வழங்க காவல் துறையிடம் கோருவது,திருநெல்வேலி நகரத்தில் உள்ள தெற்கு மவுண்ட் சாலை உள்பட மழையால் சேதமான சாலைகளை சீரமைக்க வேண்டும். குப்பைகளை முறையாக அப்புறப்படுத்த மாநகராட்சி நிா்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பன உள்ளிட்ட தீா்மானங்கள் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்டன.