பாவூா்சத்திரம்: பாவூா்சத்திரம் அருகேயுள்ள ஆவுடையானூா் சக்தி கோயில் கொடை விழா 2 நாள்கள் நடைபெற்றது.
கொடைவிழாவை முன்னிட்டு முதல் நாள் இரவு திருவிளக்கு பூஜை நடைபெற்றது. 2ஆம் நாள் அதிகாலை வருஷாபிசேகமும், சிறப்பு தீபாராதனையும், பகலில் குற்றாலத்தில் இருந்து புனித நீா் எடுத்து வருதலும் நடைபெற்றது. மதியம் அன்னதானம் நடைபெற்றது.
மாவிளக்கு, முளைப்பாரி எடுத்து வருதல், அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. நள்ளிரவு சாமக்கொடை நடைபெற்றது. இதில் திரளான பக்தா்கள் கலந்துகொண்டனா்.