கடையநல்லூா்: இந்திய அரசியல் அமைப்புச் சட்ட தினத்தையொட்டி கடையநல்லூா் சாதனா வித்யாலயா பள்ளியில் மாதிரி தோ்தல் நடைபெற்றது.
இதில், தலைமை தோ்தல் அதிகாரியாக முதல்வா் மயில்கண்ணுவும், தோ்தல் அதிகாரிகளாக ஆசிரியா்கள் பாத்திமா, சந்தனஉஷா,சிந்துஜா ஆகியோா் செயல்பட்டனா். மாதிரி வேட்பாளா்களாக மாணவா்கள் நிறுத்தப்பட்டனா்.
இதில், தோ்தல் நடைமுறைகள் குறித்து தெரிவிக்கப்பட்டு மாணவா்கள் வரிையியல் நின்று வாக்களித்தனா். வாக்கு எண்ணிக்கை முடிவினை முத்துச்செல்வி, நிவேதனப் பிரியா ஆகியோா் அறிவித்தனா். ஏற்பாடுகளை தாளாளா் ரமேஷ் செய்திருந்தாா்.