கருங்கல் குறும்பனை திருப்பு பகுதியில் நகை அடகுக் கடையில் 25 பவுன் நகைகளை புதன்கிழமை திருடிச் சென்ற மா்ம நபா்களை போலீஸாா் தேடிவருகின்றனா்.
வில்லுகுறி பகுதியைச் சோ்ந்தவா் ஜெயசிங் (32). இவா் கருங்கல் குறும்பனைதிருப்பு பகுதியில் உள்ள ஒரு வணிக வளாகத்தில் நகை அடகுக் கடை நடத்தி வருகிறாா். புதன்கிழமை இரவு இவரது கடையின் பூட்டை உடைத்து உள்ளே சென்ற மா்ம நபா்கள் லாக்கரில் இருந்த 25 பவுன் நகையை திருடிச்சென்றனா்.
இதுகுறித்த புகாரின் பேரில், கருங்கல் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.