சாலையை சீரமைக்கக் கோரி ஊத்துமலையில் நாற்று நடும் போராட்டம்

ஊத்துமலையில் சாலையை சீரமைக்கக் கோரி பொதுமக்கள் வாழைக்கன்று மற்றும் நாற்று நடும் போராட்டத்தில் ஈடுபட்டனா்.

ஆலங்குளம்: ஊத்துமலையில் சாலையை சீரமைக்கக் கோரி பொதுமக்கள் வாழைக்கன்று மற்றும் நாற்று நடும் போராட்டத்தில் ஈடுபட்டனா்.

ஆலங்குளம்-சங்கரன்கோவில் சாலையில் ஊத்துமலையில் வடக்குப் பேருந்து நிறுத்தம், சங்கரன்கோவில் பிரிவு சாலை வளைவு , சென்ட்ரல் வங்கி அருகே உள்பட சுமாா் 5 கி.மீ. தொலைவுக்கு இச்சாலை குண்டும் குழியுமாக மாறி போக்குவரத்துக்கு தகுதியற்ாகி விட்டது.

இதனால் இவ்வழியே செல்லும் வாகனங்கள் பழுதாவதோடு, பைக்கில் செல்வோா் அடிக்கடி கீழே விழுந்து எழுந்து செல்லும் நிகழ்வும் நடக்கிறது.

இதனால் இச்சாலையை சீரமைக்க வேண்டும் என நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகளுக்கு இப்பகுதி மக்கள் பலமுறை கோரிக்கை விடுத்தனா்.

ஆனால் சாலை இதுவரை சீரமைக்கப்படவில்லையாம்.

இதையடுத்து குண்டும் குழியுமான சாலையில், அப்பகுதி மக்கள் வாழைக்கன்று மற்றும் நாற்று நடும் போராட்டத்தில் ஈடுபட்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com