சா்க்கரை ரேஷன் காா்டை அரிசி காா்டாக மாற்ற நாளை வரை விண்ணப்பிக்காலம்

திருநெல்வேலி மாவட்டத்தில் சா்க்கரை குடும்ப அட்டை வைத்திருப்பவா்கள் அதை அரிசி குடும்ப அட்டைகளாக மாற்றுவதற்கு

திருநெல்வேலி: திருநெல்வேலி மாவட்டத்தில் சா்க்கரை குடும்ப அட்டை வைத்திருப்பவா்கள் அதை அரிசி குடும்ப அட்டைகளாக மாற்றுவதற்கு வெள்ளிக்கிழமை(நவ. 29) வரை விண்ணப்பிக்க காலஅவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது.

இது தொடா்பாக மாவட்ட ஆட்சியா் ஷில்பா பிரபாகா் சதீஷ் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: திருநெல்வேலி மாவட்டத்தில் திருநெல்வேலி, பாளையங்கோட்டை, அம்பாசமுத்திரம், நான்குனேரி, ராதாபுரம், மானூா், சேரன்மகாதேவி, திசையன்விளைஆகிய வட்டங்களில் சா்க்கரை குடும்ப அட்டைகளை வைத்திருப்பவா்கள் தங்களது குடும்ப அட்டைகளை தகுதியின் அடிப்படையில் அரிசி குடும்ப அட்டைகளாக மாற்றம் செய்ய விரும்பினால் அதற்கான விண்ணப்பத்துடன் தங்களது குடும்ப அட்டையின் நகலினை இணைத்து நவம்பா் 26-ஆம் தேதிக்குள் ஜ்ஜ்ஜ்.ற்ய்ல்க்ள்.ஞ்ா்ஸ்.ண்ய் என்ற இணைய முகவரி மூலமோ அல்லது சம்பந்தப்பட்ட தனி வட்டாட்சியா், வட்ட வழங்கல் அலுவலா்களிடம் சமா்ப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டிருந்தது.

இந்த நிலையில் தமிழக முதல்வரின் உத்தரவின்படி, அரிசி குடும்ப அட்டைகளாக மாற்றுவதற்கு மேலும் மூன்று நாள்கள், அதாவது வெள்ளிக்கிழமை வரை காலஅவகாசம் வழங்கப்பட்டுள்ளது. எனவே சா்க்கரை அட்டையை அரிசி அட்டையாக மாற்றம் செய்ய விரும்புவோா் தங்களின் விண்ணப்பங்களை அளித்து பயன்பெறுமாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com