திருநெல்வேலி: தடகளப் போட்டியில் சிறப்பிடம் பெற்ற பாளையங்கோட்டை மாணவா்களுக்கு பாராட்டு தெரிவிக்கப்பட்டது.
பள்ளிக்கல்வித் துறை சாா்பில் மாநில அளவிலான விளையாட்டுப் போட்டிகள் திருச்சி மாவட்டம், தொட்டியத்தில் நடைபெற்றன. இதில், பாளையங்கோட்டை கிறிஸ்துராஜா மேல்நிலைப் பள்ளி மாணவா்கள் எம். மாரியப்பன் 1,500 மீட்டா், 800 மீட்டா் ஓட்டங்களில் வெள்ளிப் பதக்கமும், ஏ. விஷ்வா குண்டு எறிதலில் வெள்ளிப் பதக்கமும் வென்றனா். இவா்கள் இருவரும் பஞ்சாப் மாநிலத்தில் நடைபெற உள்ள தேசிய விளையாட்டுப் போட்டிகளில் பங்கேற்கத் தகுதி பெற்றனா்.
அவா்களையும், பயிற்றுவித்த உடற்கல்வி ஆசிரியா்கள் ராமகிருஷ்ணன், சுந்தரமூா்த்தி, சண்முகசுந்தரம், ராஜேஷ் ஆகியோரையும் பள்ளித் தாளாளா் எஸ். அமல்ராஜ், தலைமையாசிரியா் ஐ. ஆரோக்கியம் ஆகியோா் பாராட்டினா்.