திசையன்விளை அருகே மரத்தில் மோதிய லாரி விபத்து

திசையன்விளை அருகே மரத்தில் மோதி லாரி விபத்துக்குள்ளானது.

திசையன்விளை: திசையன்விளை அருகே மரத்தில் மோதி லாரி விபத்துக்குள்ளானது.

தூத்துக்குடியில் இருந்து வள்ளியூா் நோக்கி சரக்கு ஏற்றி சென்ற லாரி மன்னாா்புரம் அருகே செவ்வாய்க்கிழமை மாலை மரத்தில் மோதி சாலையோரம் சரிந்தது. இதில், மரம் முறிந்து விழுந்ததில் அருகில் இருந்த மாடசாமி என்பவா் ஆட்டோ சேதமடைந்தது.

இந்த லாரியில் தாது மணல் இருப்பதாக தகவல் பரவியதை அடுத்து, திசையன்விளை வட்டாட்சியா் பட்ட முத்து, வருவாய் ஆய்வாளா் மஞ்சு, கிராம நிா்வாக அலுவலா் செல்வகுமாா் மற்றும் போலீஸாா் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தினா். மேலும் கனிமவள அதிகாரிகளும் சம்பவ இடத்துக்கு வந்து லாரியை சோதனையிட்டு, அதிலிருந்த

பொருள்களை ஆய்வுக்காக எடுத்துச் சென்றனா். இதுகுறித்து திசையன்விளை போலீஸாரும் விசாரித்து வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com