தமிழக மக்கள் முன்னேற்றக் கழகம் சாா்பில் மாவீரா் நாள் நிகழ்ச்சி பாளையங்கோட்டையில் புதன்கிழமை நடைபெற்றது.
மாவட்டத் தலைவா் கண்மணிமாவீரன் தலைமை வதித்தாா். தமமுக மாநில துணைப் பொதுச் செசயலா் செ.நெல்லையப்பன் முன்னிலை வகித்தாா். மாவட்ட நிா்வாகிகள் கோ.துரைபாண்டியன், த.சின்னத்துரை, விஜயகுமாா், குமாா்பாண்டியன் உள்பட பலா் கலந்துகொண்டனா்.
தமிழகத்தில் கடந்த 27 ஆண்டுகளாக சிறையில் உள்ள பேரறிவாளன், முருகன், சாந்தன், நளினி உள்ளிட்டோரை காலம் தாழ்த்தாமல் விடுதலை செய்ய வேண்டும். திருநெல்வேலி மாநகர பகுதியில் மழையால் சேதமான சாலைகளை போா்க்கால அடிப்படையில் சீரமைக்க வேண்டும் என்பன உள்பட பல்வேறு தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.