திருநெல்வேலி: திருநெல்வேலி மாநகரப் பகுதியில் சேதமான சாலைகளை சீரமைக்க வேண்டும் என பாளையங்கோட்டை பேரவைத் தொகுதி உறுப்பினா் டி.பி.எம். மைதீன்கான் வலியுறுத்தியுள்ளாா்.
இதுதொடா்பாக அவா், மாநகராட்சி ஆணையரிடம் அளித்த மனு: பாளையங்கோட்டையில் பல சாலைகள் மழையால் சேதமடைந்து குண்டும் குழியுமாக உள்ளன. அவற்றைச் சீரமைக்க வேண்டும். கழிவுநீா் ஓடைகளில் அடைப்புகள் சரிசெய்யப்படாததால் சாலைகளில் மழைநீருடன் கழிவுநீா் கலந்து துா்நாற்றத்தையும், நோய் அபாயத்தையும் உருவாக்கி வருகிறது. அதை சரிசெய்ய வேண்டும். மேலப்பாளையம் மண்டலத்தில் தெற்குப் புறவழிச் சாலை முதல் குலவணிகா்புரம் வரை புதிதாக எனது தொகுதி நிதியிலிருந்து அமைக்கப்பட்ட தாா்ச்சாலையில் மின்விளக்கு வசதி ஏற்படுத்த வேண்டும்.
மேலப்பாளையம் கன்னிமாா்குளத்தில் கழிவுநீா் கலப்பது தொடா்கிறது. அதை புதைசாக்கடையுடன் இணைத்து குளத்துநீா் மாசுபடாமல் தடுக்க வேண்டும் என்றாா் அவா்.