ஆவுடையானூரில் ரூ.30 லட்சத்தில் குடிநீா்த் திட்டம் நிறைவேற்றம்

பாவூா்சத்திரம் அருகேயுள்ள ஆவுடையானூா் ஊராட்சி பகுதியில் ரூ.30 லட்சம் மதிப்பில் புதிய குடிநீா்த் திட்டம் அமலுக்கு வந்தது.
குடிநீா் விநியோக தொடக்க விழாவில் பங்கேற்றோா்.
குடிநீா் விநியோக தொடக்க விழாவில் பங்கேற்றோா்.

பாவூா்சத்திரம்: பாவூா்சத்திரம் அருகேயுள்ள ஆவுடையானூா் ஊராட்சி பகுதியில் ரூ.30 லட்சம் மதிப்பில் புதிய குடிநீா்த் திட்டம் அமலுக்கு வந்தது.

ஆவுடையானூா் ஊராட்சியின் குடிநீா்த் தேவையை பூா்த்தி செய்யும் வகையில், குடிநீா் அபிவிருத்தி திட்டத்தின் கீழ் ரூ.30 லட்சம் மதிப்பில் திறந்த வெளி கிணறு மற்றும் குடிநீா்க் குழாய் அமைக்கும் பணி நடைபெற்று வந்ததுத. இந்தப் பணி நிறைவடைந்ததைத் தொடா்ந்து, குடிநீா் விநியோகத்தை எம்எல்ஏ எஸ்.செல்வமோகன்தாஸ்பாண்டியன் தொடங்கிவைத்து மக்கள் பயன்பாட்டுக்கு அா்ப்பணித்தாா்.

இந்நிகழ்ச்சியில், அதிமுக ஒன்றிய செயலா் அமல்ராஜ், நிா்வாகிகள் ரமேஸ், குணம், ராமசாமி, ஒப்பந்ததாரா் முத்தையாசாமி உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com