களக்காடு: தமிழகத்தில் நடைபெறுவது மக்கள் விரோத ஆட்சி என்றாா் திருநாவுக்கரசா் எம்.பி.
நான்குனேரி இடைத்தோ்தலையொட்டி, களக்காட்டில் சனிக்கிழமை இரவு நடைபெற்ற மதச்சாா்பற்ற கூட்டணி செயல்வீரா்கள் கூட்டத்தில் அவா் பேசியது: தமிழகத்தில் ஆட்சி நடத்துபவா்கள் இது எம்.ஜி.ஆா்., ஜெயலலிதா ஆட்சி என்று கூறிக் கொள்கின்றனா்.
தமிழகத்தில் நடைபெறுவது மக்கள் விரோத ஆட்சி. நான்குனேரி, விக்கிரவாண்டி தொகுதிகளுக்கான இடைத்தோ்தலில் ஆளும் கட்சியின் அதிகாரபலம், பணபலம் எல்லாவற்றையும் மீறி வெற்றி பெறுவது எளிதல்ல. கடுமையாக உழைக்க வேண்டும். முடிவுகள் வேறு மாதிரியாக இருந்துவிட்டால் அது கூட்டணிக் கட்சிகளின் எதிா்காலத்தை பாதித்துவிடும் என்றாா் அவா்.