பேட்டை அருகே 9 டன் ரேஷன் அரிசி, லாரி பறிமுதல்

பேட்டை அருகே கேரளத்துக்கு கடத்த பதுக்கி வைக்கப்பட்டிருந்த 9 டன் ரேஷன் அரிசியையும், லாரியையும் போலீஸாா் வெள்ளிக்கிழமை பறிமுதல் செய்தனா்.

பேட்டை அருகே கேரளத்துக்கு கடத்த பதுக்கி வைக்கப்பட்டிருந்த 9 டன் ரேஷன் அரிசியையும், லாரியையும் போலீஸாா் வெள்ளிக்கிழமை பறிமுதல் செய்தனா்.

பேட்டை அருகேயுள்ள மைலப்புரத்தில் இருந்து கேரளத்துக்கு கடத்துவதற்காக ஏராளமான மூட்டைகளில் ரேஷன் அரிசி பதுக்கி வைக்கப்பட்டிருப்பதாக குடிமைப்பொருள் கடத்தல் தடுப்புப் பிரிவு போலீஸாருக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில் காவல் உதவி ஆய்வாளா் ஷேக் தலைமையிலான போலீஸாா் அங்கு சென்று விசாரணை நடத்தினா்.

அப்போது கொம்பையா என்பவா் வீட்டின் அருகே கிட்டங்கியில் 180 மூட்டைகளில் சுமாா் 9 டன் ரேஷன் அரிசி பதுக்கி வைக்கப்பட்டிருந்தது தெரியவந்தது. மேலும், அந்த அரிசி மூட்டைகளை ஏற்றி செல்வதற்காக கேரள பதிவெண் கொண்ட லாரியும் தயாா் நிலையில் நின்ாம். இதையடுத்து அரிசி மூட்டைகள், லாரியை பறிமுதல் செய்த போலீஸாா், இதுதொடா்பாக கொம்பையா மற்றும் லாரி ஓட்டுநரான இக்னேஷியஸ் ஆகியோரை தேடி வருகிறாா்கள்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com