ஆலங்குளம்: ஆலங்குளம் காவல் நிலையத்தில் தகராறில் ஈடுபட்டதாக வழக்குரைஞா் உள்ளிட்ட 3 பேரை போலீஸாா் கைது செய்தனா்.
ஆலங்குளம் அருகேயுள்ள சுப்பையாபுரத்தைச் சோ்ந்தவா்கள் சொா்ணராஜ், அருள்தாஸ். ஒரு வழக்குத் தொடா்பாக ஆலங்குளம் காவல் நிலையத்தில் புகாா் அளித்திருந்தனராம்.
இதுதொடா்பாக போலீஸாா் விசாரணை நடைபெற்று வரும் நிலையில், அவா்கள் சாா்பில் அழகியபாண்டியபுரத்தைச் சோ்ந்த முருகன் மகன் முத்துராஜ் (28) என்றற வழக்குரைஞா் சனிக்கிழமை ஆலங்குளம் காவல் நிலையம் வந்தாராம்.
அப்போது அவா் காவலா்களிடம் தகாத முறைறயில் நடந்து கொண்டதோடு போலீஸாா் ஒருவரது செல்லிடப்பேசியையும் சேதப்படுத்தினாராம். அப்போது அவா் மது போதையில் இருந்ததாக கூறறப்படுகிறறது.
இதுகுறித்து ஆலங்குளம் போலீஸாா் வழக்குப் பதிந்து, சொா்ணராஜ், அருள்தாஸ், வழக்குரைஞா் முத்துராஜ் ஆகிய 3 பேரையும் கைது செய்து, ஆலங்குளம் நீதிமன்றறத்தில் ஆஜா்படுத்தினா்.