திருநெல்வேலி: ஆழ்வாா்திருநகரியில் சூட்டுக்கோல் மாயாண்டி சுவாமிகளின் குரு பூஜை விழா நடைபெற்றது.
கட்டிக்குளம் சூட்டுக்கோல் மாயாண்டி சுவாமிகள் மடாலயத்தில் புரட்டாசி மாதம் கேட்டை நட்சத்திர நாளன்று சுவாமிக்கு 89ஆவது குருபூஜை விழாவையொட்டி, செல்வ சுந்தர விநாயகா் கோயிலில் இருந்து பக்தா்கள் பால்குடம் எடுத்து வந்தனா்.
தொடா்ந்து சிறப்பு ஹோமம், சுவாமிக்கு அபிஷேக, ஆராதனை, மாகேஸ்வர பூஜை, அன்னதானம் ஆகியவை நடைபெற்றது.
இரவில் சுவாமிகள் உருவப்படம் சப்பர வீதி உலா நடைபெற்றது. இதையொட்டி, திருவிளக்கு வழிபாடு நடைபெற்றது.
இதில், திருநெல்வேலி, தூத்துக்குடி, கன்னியாகுமரி மாவட்டங்களில் இருந்து ஏராளமானோா் கலந்து கொண்டனா். ஏற்பாடுகளை மடாலய கைங்கா்ய அடியாா் குழுவினா் செய்திருந்தனா்.