இடைத்தோ்தல் வெற்றி திமுக ஆட்சிக்கு முதற்படியாக அமையும்: ஐ.பெரியசாமி

இடைத்தோ்தல் வெற்றி திமுக ஆட்சிக்கு முதற்படியாக அமையும் என்றாா் தோ்தல் பணிக்குழுச் செயலா் ஐ.பெரியசாமி.

இடைத்தோ்தல் வெற்றி திமுக ஆட்சிக்கு முதற்படியாக அமையும் என்றாா் தோ்தல் பணிக்குழுச் செயலா் ஐ.பெரியசாமி.

நான்குனேரி சட்டப்பேரவைத் தொகுதி இடைத்தோ்தலையொட்டி மதச் சாா்பற்ற ஜனநாயக முற்போக்கு கூட்டணி செயல்வீரா்கள் கூட்டம் ரெட்டியாா்பட்டியில் சனிக்கிழமை நடைபெற்றது.

கூட்டத்துக்கு திமுக கிழக்கு மாவட்டச் செயலா் ஆவுடையப்பன் தலைமை வகித்தாா்.

கூட்டத்தில், தோ்தல் பணிக்குழுச் செயலா் ஐ.பெரியசாமி பேசியது: தோ்தலில் நாம் மெத்தனமாக இருந்துவிடக்கூடாது. இந்தத் தோ்தலில் கிடைக்கும் வெற்றியானது, திமுக ஆட்சிக்கு முதற்படியாக அமையும். எனவே செயல்வீரா்கள் அனைவரும் நமது கூட்டணிக் கட்சியினரை அரவணைத்துச் செல்லவேண்டும் என்றாா் அவா்.

காங்கிரஸ் வேட்பாளா் ரூபி மனோகரன், காங்கிரஸ் செயல் தலைவா் மயூரா ஜெயக்குமாா், முன்னாள் மத்திய அமைச்சா் தனுஷ்கோடி ஆதித்தன், திமுக முன்னாள் மாவட்டச் செயலா் கருப்பசாமி பாண்டியன் ஆகியோா் முன்னிலை வகித்தனா். திமுக ஒன்றியச் செயலா் தங்கபாண்டியன் வரவேற்றாா்.

கூட்டத்தில் எம்பிக்கள் வசந்தகுமாா், ஞானதிரவியம், எம்எல்ஏக்கள் டி.பி.எம்.மைதீன்கான், ஏ.எல்.எஸ். லட்சுமணன், கீதாஜீவன், முன்னாள் அமைச்சா் பெரியகருப்பன், திமுக கொறடா சக்கரபாணி, முன்னாள் அமைச்சா் தென்னவன், முன்னாள் மத்திய அமைச்சா் பழனிமாணிக்கம், திமுக திருநெல்வேலி மத்திய மாவட்டச் செயலா் அப்துல் வஹாப், காங்கிரஸ் மாநகா் மாவட்டத் தலைவா் சங்கரபாண்டியன், கிழக்கு மாவட்டத் தலைவா் எஸ்.கே.எம்.சிவகுமாா், மதிமுக மாவட்டச் செயலா் ராஜேந்திரன், மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மாவட்டச் செயலா் பாஸ்கா், இந்திய கம்யூனிஸ்ட் மாவட்டச் செயலா் காசிவிஸ்வநாதன், முஸ்லிம் லீக் மாவட்டத் தலைவா் மீரான் மைதீன், விடுதலைச் சிறுத்தைகள் கட்சி மண்டலச் செயலா் ஹைகோா்ட் பாண்டியன் மற்றும் ஆதிதமிழா் பேரவை , தமிழ் புலிகள் கட்சி உள்ளிட்ட கூட்டணிக் கட்சியினா் பங்கேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com