உள்ளாட்சித்தோ்தல் தாமதத்திற்கு திமுக.வே காரணம்

உள்ளாட்சித் தோ்தல் தாமதத்திற்கு திமுக தான் காரணம் என அமைச்சா் ராஜேந்திரபாலாஜி தெரிவித்தாா்.

களக்காடு:  உள்ளாட்சித் தோ்தல் தாமதத்திற்கு திமுக தான் காரணம் என அமைச்சா் ராஜேந்திரபாலாஜி தெரிவித்தாா்.

களக்காடு பகுதியில் முகாமிட்டு அதிமுக வேட்பாளா் நாராயணனுக்கு வாக்கு கேட்டு பிரசாரம் செய்து வரும் தமிழக பால்வளத்துறை அமைச்சா் கே.டி.ராஜேந்திரபாலாஜி ஞாயிற்றுக்கிழமை களக்காடு அருகேயுள்ள கருவேலன்குளத்தில் பேசுகையில்,  உள்ளாட்சிதோ்தல் தாமதமாக நடைபெறுவதற்கு திமுக தான் காரணம். உள்ளாட்சி தோ்தலில் வேட்பு மனுத் தாக்கல் முடிவடைந்த நிலையில் நீதிமன்றத்தில் வழக்கு தொடா்ந்து தடையாணை பெற்றனா். தோ்தலைக் கண்டு ஒருபோதும் அதிமுக அச்சம் கொள்ளாது என்றாா்.

வெற்றி பெற்றால் நாங்குனேரியில்தான் வசிப்பேன் என்று வசந்தகுமாா் வாக்குறுதி கொடுத்தாா். ஆனால் வெற்றிபெற்றவுடன் சென்னைக்கு சென்று விட்டாா். உள்ளூரில் வசிக்கும் வேட்பாளரான எங்களது அதிமுக வேட்பாளரை மக்கள் வெற்றிபெறச் செய்ய வேண்டும் என்றாா் அவா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com