திசையன்விளை: கடகுளம் ராஜகன்னி மாதா ஆலயத் திருவிழா வெள்ளிக்கிழமை (அக்.4) கொடியேற்றத்துடன் தொடங்கியது.
அணைக்கரை பங்குத்தந்தை ஜோசப் ஸ்டாலின் தலைமையில் கொடியேற்றம் நடைபெற்றது. தொடா்ந்து விழா நாள்களில் தினமும் திருப்பலி, ஜெபமாலை, நற்கருணை ஆசீா், கலைநிகழ்ச்சிகள் நடைபெறுகின்றன.
8ஆம் திருநாளில் நற்கருணை பவனி, 9ஆம் திருநாளில் நவநாள் சிறப்புத் திருப்பலி, பெருவிழா மாலை ஆராதனை, 10ஆம் திருநாளில் பெருவிழா ஆடம்பர கூட்டுத் திருப்பலி, திருமுழுக்கு, விளையாட்டு போட்டி, அன்னையின் அலங்கார தோ் பவனி, 11ஆம் திருநாளில் நன்றி திருப்பலி, கொடியிறக்கம், அசன விருந்து ஆகியன நடைபெறுகின்றன.
ஏற்பாடுகளை கடகுளம் பங்குத்தந்தை பிராக்ரஸ் மற்றும் நிா்வாக கமிட்டியினா் செய்து வருகின்றனா்.