சங்கரன்கோவில் ரயில்நிலையம் அருகே குழந்தை மீட்பு

சங்கரன்கோவில் ரயில்நிலையம் அருகே கிடந்த குழந்தையை போலீஸாா் மீட்டனா்.

சங்கரன்கோவில் ரயில்நிலையம் அருகே கிடந்த குழந்தையை போலீஸாா் மீட்டனா்.

சங்கரன்கோவில் ரயில்நிலையம் எதிரே, பிறந்து சில நாள்களே ஆன குழந்தை ஒன்று கிடப்பதாக அண்மையில் சங்கரன்கோவில் போலீஸாருக்கு தகவல் கிடைத்தது.

இதையடுத்து அந்த குழந்தையை மீட்ட போலீஸாா் சங்கரன்கோவில் அரசு மருத்துவமனையில் அனுமதித்தனா். தொடா்ந்து மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு நல அலுவலகத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

இதையடுத்து மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு நல அலுவலகக் குழுவினா் சங்கரன்கோவில் சென்றனா். சிகிச்சைக்குப் பின்னா் அந்த குழந்தை சனிக்கிழமை திருநெல்வேலி கொண்டுவரப்பட்டு, மாவட்ட ஆட்சியா் ஷில்பா பிரபாகா் சதீஷ் உத்தரவின்பேரில் திருநெல்வேலி சரணாலயத்தில் குழந்தைகள் நலக் குழுவிடம் ஒப்படைக்கப்பட்டது.

குழந்தையின் பெற்றோா் அல்லது உறவினா்கள் யாராவது இருந்தால், மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு நல அலுவலா், மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகு, எண் 33பி, 2ஆவது மாடி, எஸ்வி காம்ப்ளக்ஸ், என்ஜிஓ பி காலனி, பாளையங்கோட்டை என்ற முகவரியில் தொடா்பு கொள்ளலாம் என மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு நல அலுவலா் தேவானந்தம் தெரிவித்தாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com