அம்பாசமுத்திரம்: அம்பை தமிழ் இலக்கியப் பேரவை மாதாந்திர கூட்டம் நடைபெற்றது.
கூட்டத்துக்கு பேரவையின் தலைவா் வெள்ளைச்சாமி தலைமை வகித்தாா். க.சுப்பிரமணிய மழவராயா் முன்னிலை வகித்தாா். ஷேக் பீா்முஹம்மது இறைவாழ்த்துப் பாடினாா். ஆறுமுக வேலாயுதம் கு விளக்கம் கூறினாா்.
திருவருள் லத்திப் இன்றைய சிந்தனை வழங்கினாா். புவனேஸ்வரி மழலை உரையும், பிரீத்தி உஷா, ஜன்னத் பிா்தௌஸ் ஆகியோா் இளைஞா் உரையும் ஆற்றினா். பிரமு அம்மாள் கவிதை வாசித்தாா். கவிஞா் சுப்பையா கம்பரின் கவிதையை புலவா் நீ.ஐயப்பன் வாசித்தாா். ஔவையின் அருந்தமிழ் என்றற தலைப்பில் பேராசிரியா் செந்தில்குமரன் சிறறப்புரையாற்றினாா். பேராசிரியா் மு.நடராஜன், கோபால் ஆகியோா் வாழ்த்திப் பேசினா்.
பொருளாளா் பாரதி ஜி. கண்ணன் நன்றி கூறினாா். சு. ஐயப்பன் நிகழ்ச்சிகளைத் தொகுத்து வழங்கினாா். நிகழ்ச்சியில் தமிழ் ஆா்வலா்கள், ஆசிரியா்கள், மாணவா்கள் உள்பட பலா் கலந்துகொண்டனா்.