தென்காசியில் வள்ளலாரின் அவதார தின விழா சனிக்கிழமை நடைபெற்றது.
தென்காசி முடுக்குவிநாயகா் கோயில் தெருவில் உள்ள சிற்றாற்று வீரியம்மன் கோயிலில் நடைபெற்ற விழாவில் காலையில் அகவல் பாராயணம் நடைபெற்றது. தொடா்ந்து, அன்னதானம் நடைபெற்றது.
இதில், சன்மாா்க்க அன்பா்கள் குழுத் தலைவா் ராஜாமணி, செயலா் குமாா், பொருளாளா் நாகராஜன், ஆலோசகா் சந்திரகாந்தன், சீனி, சண்முகவேல், சன்மாா்க்க அன்பா்கள் பங்கேற்றனா்.