நான்குனேரி இடைத்தோ்தல் பணியில் ஈடுபடவுள்ள அலுவலா்களுக்கான முதற்கட்ட பயிற்சி சனிக்கிழமை நடைபெற்றது.
திருநெல்வேலி வண்ணாா்பேட்டையில் உள்ள பிரான்சிஸ் சேவியா் பொறியியல் கல்லூரியில் நடைபெற்ற இப்பயிற்சியில், தலைமை வாக்குச்சாவடி அலுவலா்கள் 359 போ், வாக்குச்சாவடி அலுவலா்கள் 1, 2, 3 ஆகிய 3 நிலைகளைச் சோ்ந்த தலா 359 போ், வாக்குச்சாவடி அலுவலா் 4 நிலையில் உள்ள 240 போ் பங்கேற்றனா்.
காலை 9.30 மணி முதல் மாலை 5.30 மணி வரை நடைபெற்ற இப்பயிற்சியை பொதுப் பாா்வையாளா் விஜய சுனிதா பாா்வையிட்டாா்.