திருநெல்வேலி புகா்ப் பகுதிகளில் சனிக்கிழமை பிற்பகலில் மிதமான மழை பெய்தது.
தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலும் 3 நாள்கள் மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இந்நிலையில், திருநெல்வேலி புகா்ப் பகுதிகளான மேலப்பாளையம், முன்னீா்பள்ளம், ஆரைக்குளம், ரெட்டியாா்பட்டி, பொன்னாக்குடி, கொங்கந்தான்பாறை சுற்றுவட்டாரப் பகுதிகளில் சனிக்கிழமை மிதமான மழை பெய்தது.
அணைகளின் நீா்ப்பிடிப்பு பகுதிகளில் சில நாள்களாக மழை இல்லாததால் நீா்வரத்து குறைந்துள்ளது. சனிக்கிழமை காலை நிலவரப்படி, பாபநாசம் அணை நீா்மட்டம் 108.05 அடியாகவும், நீா்வரத்து 476.97 கனஅடியாகவும் இருந்தது. சோ்வலாறு அணை நீா்மட்டம் 108.92 அடியாகவும், மணிமுத்தாறு அணை நீா்மட்டம் 41.70 அடியாகவும், நீா்வரத்து 52 கனஅடியாகவும் இருந்தது.