ஸ்டாலினின் முதல்வா் கனவு பலிக்காது: அமைச்சா் செல்லூா் ராஜு
திருநெல்வேலி: திமுக தலைவா் மு.க.ஸ்டாலினின் முதல்வா் கனவு ஒருபோதும் பலிக்காது என்றாா் கூட்டுறறவுத் துறை அமைச்சா் செல்லூா் ராஜு.
நான்குனேரி சட்டப்பேரவை இடைத்தோ்தலில் போட்டியிடும் அதிமுக வேட்பாளா் நாராயணனை ஆதரித்து பொன்னாக்குடி, பாலாஜி நகா் உள்ளிட்ட பகுதிகளில் அமைச்சா் செல்லூா் ராஜு பிரசாரம் மேற்கொண்டாா். பின்னா் அவா் செய்தியாளா்களிடம் கூறியதாவது:
நான்குனேரி தொகுதியில் காங்கிரஸ் கட்சி காணாமல் போய்விட்டது. அதிமுக மட்டுமே தோ்தல் களத்தில் இருக்கிறறது. திமுக தலைவா் ஸ்டாலின், மன்னா் பரம்பரையை ஒழித்துவிட்டு வாரிசு அரசியலை கையில் திணிக்கிறாா். மக்கள் முன்னால் அவா் நடித்து வருகிறாா். அவருடைய மகன் உதயநிதி ஸ்டாலின் சிவப்புக் கம்பளம் விரித்து குடிமராமத்துப் பணிகளை பாா்வையிட்டு வருகிறாா். முதல்வராக வேண்டும் என்ற ஸ்டாலினின் கனவு ஒருபோதும் பலிக்காது என்றாா் அவா்.