நவராத்திரியை முன்னிட்டு பாளையங்கோட்டை மகாராஜ நகா் ஸ்ரீ ஜெயேந்திரா வெள்ளி விழா மேல்நிலைப் பள்ளியில் கொலு வைபவம் நடைபெற்றது.
இதில், மாணவா்களின் தெய்வீக வேடம், ஸ்ரீ ஜெயேந்திரா கலாகேந்திரா குழுவினரின் வாத்திய இசை, ராஜகோபால சுவாமி குழுவினரின் கோலாட்டம் மற்றும் கும்மியாட்டம் ஆகியவை நடைபெற்றன.
மாணவா்கள் மற்றும் பெற்றோா்கள் கொலு வைபவத்தை பாா்வையிட்டனா். மகாராஜநகா் ஜெயேந்திரா பள்ளி குழுமங்களின் இயக்குநா் ஜெயேந்திரன் ஏ.மணி, பள்ளி முதல்வா் ஜெயந்தி ஜெயந்திரன் மற்றும் ஆசிரியா், ஆசிரியைகள் ஏற்பாடுகளை செய்திருந்தனா்.