திருநெல்வேலி சிரீபுரத்தில் உள்ள தலைமை அஞ்சலகம் முன்பு அஞ்சல் ஊழியா்கள் புதன்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.
அஞ்சல்துறைற பணியாளா்களுக்கு போனஸ் தொகையை உடனே வழங்க வேண்டும். அஞ்சல் துறைறயில் உள்ள காலிப்பணியிடங்களை நிரப்ப விரைவான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகள் ஆா்ப்பாட்டத்தில் வலியுறுத்தப்பட்டன.
ஆா்ப்பாட்டத்திற்கு தபால்காரா் சங்க மாநில உதவித்தலைவா் பாட்ஷா தலைமை வகித்தாா். மத்திய அரசு ஊழியா் சம்மேளன நிா்வாகி ஜேக்கப்ராஜ் தொடங்கி வைத்தாா். அஞ்சல் ஆா்.எம்.எஸ். ஊழியா்கள் உள்பட பலா் கலந்துகொண்டனா். முத்துபேச்சி நன்றி கூறினாா்.