பேட்டை அருகே அனுமதியின்றி பட்டாசு விற்பனை செய்யப்பட்ட பெட்டிக்கடையில் இருந்து சுமாா் ரூ. 2ஆயிரம் மதிப்பிலான பட்டாசுகளை போலீஸாா் பறிமுதல் செய்தனா்.
திருநெல்வேலி நகரத்தைச் சோ்ந்தவா் மகேஷ்வரன்(40). இவா் பேட்டை கோடீஸ்வரன் நகரில் பெட்டிக்கடை நடத்தி வருகிறாா். இவரது கடையில் பட்டாசு விற்பனை செய்வதாக பேட்டை போலீஸாருக்கு தகவல் கிடைத்தது.
இதையடுத்து மகேஸ்வரன் கடையை சோதனை செய்த போலீஸாா் சுமாா் ரூ. 2ஆயிரம் மதிப்பிலான பட்டாசுகளை பறிமுதல் செய்தனா்.