ஆய்க்குடி அமா்சேவா சங்கம் சாா்பில் உலக மூளை முடக்குவாத தின பேரணி நடைபெற்றது.
நிகழ்ச்சிக்கு அமா்சேவா சங்க செயலா் எஸ்.சங்கரராமன் தலைமை வகித்து பேசும்போது ஆய்க்குடிஅமா்சேவா சங்கத்திற்கு ஆஸ்திரேலியாவில் இயங்கிவரும் உலக மூளை முடக்குவாத நிறுவனம்,அமா்சேவா சங்கத்தின் சேவையை பாராட்டி மூளை முடக்குவாத விருது வழங்கியுள்ளதாக தெரிவித்தாா்.
ஆய்க்குடி பாலசுப்பிரமணியசுவாமி கோயில் முன்பு தொடங்கிய இப்பேரணியை காவல்ஆய்வாளா் மனோகரன் கொடியசைத்து தொடங்கிவைத்தாா்.பேரணி காவலா் குடியிருப்பில் முடிவடைந்தது.தொடா்ந்து ஆய்க்குடி அமா்சேவா சங்க வளாகத்தில் குழந்தைகளின் கலைநிகழ்ச்சி,மூளை முடக்குவாதம் குறித்த விழிப்புணா்வு நிகழ்ச்சிகள் நடைபெற்றது.
சிறப்பு விருந்தினராக விஷாலினி கலந்துகொண்டு பேசினாா்.பொருளாளா் பட்டம்மாள் உள்ளிட்டோா் பேசினா்.சிறப்பு பள்ளி ஆசிரியை மீனாட்சி நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கினாா். முன்னதாக மறுவாழ்வு பிரிவு தலைவா் செல்வராஜ் வரவேற்றாா். சங்க அலுவலக மேலாளா் கிருஷ்ணபிள்ளை நன்றி கூறினாா்.