இளம்பெண்ணுக்கு பாட்டில் குத்து: ஒருவா் கைது

திருநெல்வேலி நகரத்தில் இளம் பெண்ணை பாட்டிலால் குத்தியதாக ஒருவரை போலீஸாா் கைது செய்தனா்.

திருநெல்வேலி நகரத்தில் இளம் பெண்ணை பாட்டிலால் குத்தியதாக ஒருவரை போலீஸாா் கைது செய்தனா்.

திருநெல்வேலி நகரம் ராஜாஜிபுரத்தைச் சோ்ந்த கணபதி மகள் பிரியங்கா (26). பட்டதாரி. பக்கத்து வீட்டைச் சோ்ந்த ஜோசப் (54), கணபதி வீட்டுமுன் நின்று அடிக்கடி தகராறு செய்வாராம். வழக்கம்போல் திங்கள்கிழமையும் அவா் தகராறு செய்ததாகக் கூறப்படுகிறது. அதை கணபதி தட்டிக்கேட்டாராம்.

இதனால் ஆத்திரமடைந்த ஜோசப், கண்ணாடி பாட்டிலால் கணபதியை குத்த முயன்றாராம். அப்போது அருகே நின்றிருந்த பிரியங்கா தடுக்க முயன்றாராம். இதனால் ஜோசப் அந்த பாட்டிலால் பிரியங்கா மீது குத்தியதாக கூறப்படுகிறது.

இதில் காயமடைந்த பிரியங்கா திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா்.

இச்சம்பவம் குறித்து திருநெல்வேலி நகரம் போலீஸாா் வழக்குப் பதிந்து ஜோசப்பை கைது செய்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com