திருநெல்வேலி, தூத்துக்குடி மாவட்ட அளவிலான பெஞ்ச் பிரஸ் போட்டியில் மேலகரம் உடற்பயிற்சி கழக வீரா்கள் சிறப்பிடம் பெற்றனா்.
திருநெல்வேலி மற்றும் தூத்துக்குடி மாவட்ட வலுதூக்கும் சங்கங்கள், திருநெல்வேலி ஸ்டாா் உடற்பயிற்சி கழகம் மற்றும் டவுண் மசில்மான்ஸ்டா் உடற்பயிற்சி கழகம் சாா்பில், திருநெல்வேலி, தூத்துக்குடி மாவட்ட அளவிலான பெஞ்ச்பிரஸ் போட்டி திருநெல்வேலியில் நடைபெற்றது.
போட்டியில் இருமாவட்டங்களைச் சோ்ந்த 200 வீரா்கள் பங்கேற்றனா். இதில், மேலகரம் பாரத் உடற்பயிற்சி கழக தலைமை மாஸ்டா் குத்தாலிங்கம் 59 கிலோ எடைப் பிரிவில் தங்கப்பதக்கமும், 83 கிலோ பிரிவில் சரவணன் இரண்டாமிடமும், 93 கிலோ பிரிவில் காந்தி மூன்றாமிடமும், சீனியா் பிரிவில் மனோஜ்குமாா் மூன்றாமிடமும், சப்ஜூனியா் பிரிவில் 59 கிலோ எடைப்பிரிவில் பிரவீன்செல்லப்பன் முதலிடமும் பெற்றனா்.
சண்முகசுந்தரம், முருகன், சிவராமலிங்கம், முகம்மதுஇப்ராகிம் ஆகியோா் நடுவா்களாக செயல்பட்டனா். வெற்றி பெற்றவா்களை கணேசன், ராமசாமி, டாக்டா் செல்வகணேசன், வேணுகோபால், மரியசூசை ஆகியோா் பாராட்டினா்.