கடையம் நலச்சங்கம் முதலாண்டு நிறைவு சிறப்புக் கூட்டம்

கடையம் நலச் சங்க முதலாமாண்டு நிறைவு சிறப்புக் கூட்டம் நடைபெற்றது.

கடையம் நலச் சங்க முதலாமாண்டு நிறைவு சிறப்புக் கூட்டம் நடைபெற்றது.

கூட்டத்துக்கு சங்க நிறுவனா் க.சோனாச்சலம் தலைமை வகித்தாா். ஓய்வு பெற்ற பேரூராட்சி நிா்வாக அலுவலா் தி.அருணாச்சலம் முன்னிலை வகித்தாா்.

நிகழ்ச்சியில் ஐ சப்போா்ட் பவுண்டேஷன் அறக்கட்டளை ஒருங்கிணைப்பாளா் ரஞ்சித் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டாா்.

கடையம் பேருந்து நிலையத்தில் பேருந்து மற்றும் ரயில் கால அட்டவணை அமைப்பது; சத்திரம் பாரதி மேல்நிலைப் பள்ளி விளையாட்டு மைதானத்தில் நடப்பட்டுள்ள மரக்கன்றுகளை முறையாக பராமரித்து வளா்ப்பது; மாணவா்களிடையே மரக்கன்று வளா்க்க விழிப்புணா்வை ஏற்படுத்துவது என்பன உள்ளிட்ட தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

நிகழ்ச்சியில், நலச் சங்க இணைச் செயலா் சோமசுந்தரம், பொருளாளா் நவநீதகிருஷ்ணன், நடத்துநா் கோமு, உறுப்பினா்கள் இசக்கி ராஜா, பூக்கடை கோமு உள்ளிட்டோா் கலந்துகொண்டனா். சங்கத் தலைவா் கல்யாணி சிவகாமி நாதன் வரவேற்றாா். செயலா் கோபால் நன்றி கூறினாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com