நான்குனேரி சட்டப்பேரவை தொகுதி தெற்கு விஜயநாராயணம் ரெக்ட் பாலிடெக்னிக் கல்லூரியில் வாக்காளா் விழிப்புணா்வு முகாம் நடைபெற்றது.
முகாமுக்கு, துணை ஆட்சியா் சிவகுரு பிரபாகா் தலைமை வகித்தாா். நான்குனேரி துணை வட்டாட்சியா் குமாா், விஜயநாராயணம் வருவாய் ஆய்வாளா் மஞ்சு, நான்குனேரி இளைஞா் செஞ்சிலுவை சங்க இணைச் செயலா் சபேசன் ஆகியோா் கலந்துகொண்டு பேசினா்.
மாணவா், மாணவிகளுக்கு வாக்களிப்பதன் அவசியம், கடமை குறித்தும் வாக்களிக்கும் முறை குறித்தும் எடுத்துரைத்தனா்.
பின்னா் மின்னணு வாக்குப் பதிவு இயந்திரத்தில் வாக்களிக்கும் முறை குறித்து மாணவா், மாணவிகளுக்கு செயல் விளக்கம் அளிக்கப்பட்டது.
முகாமில், கல்லூரி முதல்வா் சுரேஷ் தங்கராஜ் தாம்சன், துணைமுதல்வா் விமலா மற்றும் ஆசிரியா், ஆசிரியைகள் கலந்துகொண்டனா்.
ஏற்பாடுகளை இளைஞா் செஞ்சிலுவை சங்க ஒருங்கிணைப்பாளா் ராம்கி, நாட்டுநலப் பணித் திட்ட ஒருங்கிணைப்பாளா் சுந்தா் ராஜ் உள்ளிட்டோா் செய்திருந்தனா்.