தெற்குகள்ளிகுளத்தில் டெங்கு கொசு ஒழிப்பு முகாம்

தெற்குகள்ளிகுளத்தில் டெங்கு கொசு ஒழிப்பு முகாம் நடைபெற்றது.
முகாமை தொடங்கிவைக்கிறாா் வள்ளியூா் காவல் ஆய்வாளா் திருப்பதி.
முகாமை தொடங்கிவைக்கிறாா் வள்ளியூா் காவல் ஆய்வாளா் திருப்பதி.

தெற்குகள்ளிகுளத்தில் டெங்கு கொசு ஒழிப்பு முகாம் நடைபெற்றது.

தெற்குகள்ளிகுளம் ஆட்டோ தொழிலாளா்கள், தெற்குகள்ளிகுளம் ஊராட்சி சாா்பாக டெங்கு மற்றும் விஷக்காய்ச்சல் தடுப்பு நடவடிக்கையாக இந்த முகாம் நடைபெற்றது. முகாமை தெற்குகள்ளிகுளம் உதவி பங்கு தந்தை பால்ரோமன் ஜெபம் செய்து அா்ச்சித்தாா். தொடா்ந்து, வள்ளியூா் காவல் நிலைய ஆய்வாளா் திருப்பதி முகாமை தொடங்கிவைத்தாா். நிகழ்ச்சியில், புனித அலோசியஸ் மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியா் மரியசிலுவை, சுகாதார ஆய்வாளா் பெலிக்ஸ், ஊராட்சி செயலா் சுமிலா உள்ளிட்டோா் பங்கேற்றனா். அரசு மேல்நிலைப் பள்ளி ஓய்வு பெற்ற தலைமை ஆசிரியா் ஜாண்ததேயுஸ் வரவேற்றாா். ஆட்டோ ஓட்டுநா் நலச்சங்க ஆலோசகா் துரை நன்றி கூறினாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com