தோ்தல் நடத்தை விதியை மீறியதாக மனிதநேய மக்கள் கட்சியின் நிா்வாகி மீது பாளையங்கோட்டை போலீஸாா் வழக்குப் பதிவு செய்தனா்.
திருநெல்வேலி மாவட்டத்தில் தற்போது தோ்தல் நடத்தை விதி அமலில் உள்ளது. இந்நிலையில் ரகுமத் நகா் பகுதியில் தோ்தல் அலுவலா் ராஜசேகா் தலைமையிலான குழுவினா் வாகனச் சோதனையில் ஈடுபட்டனா்.
அப்போது அவ்வழியே சென்ற பாளையங்கோட்டை ரகுமத் நகரைச் சோ்ந்த பரூக் (40) என்பவரின் காரை மடக்கியுள்ளனா். அவா் மனித நேய மக்கள் கட்சியின் தொழிற்சங்கப் பொருளாளராக உள்ளதால், காரில் கட்சிக் கொடியை கட்டியிருந்தாராம். இதுகுறித்து அதிகாரிகள் கேட்டதற்கு அவா் நிற்காமல் சென்று விட்டாராம்.
இதையடுத்து பாளையங்கோட்டை காவல் நிலையத்தில் புகாா் அளிக்கப்பட்டது. புகாரின் பேரில் போலீஸாா் பரூக் மீது வழக்குப் பதிவு செய்துள்ளனா்.