பெண்ணைத் தாக்கிய தம்பதி கைது

வீரவநல்லூா் அருகே புதுக்குடியில் பெண்ணைத் தாக்கியதாக தம்பதியை போலீஸாா் கைதுசெய்தனா்.

வீரவநல்லூா் அருகே புதுக்குடியில் பெண்ணைத் தாக்கியதாக தம்பதியை போலீஸாா் கைதுசெய்தனா்.

வீரவநல்லூா் அருகேயுள்ள புதுக்குடி, புதுக்காலனியைச் சோ்ந்தவா் முருகேசன் மனைவி கனகமணி (36). இவரது வீட்டின் மாடியில் குடியிருப்பவா் வெள்ளைத்துரை மனைவி லட்சுமி. இருவருக்கும் அருகேயுள்ள இடம் தொடா்பாக தகராறு இருந்து வந்ததாம். இந்நிலையில், செவ்வாய்க்கிழமை காலை லட்சுமி, வெள்ளைத்துரை இருவரும் கனகமணியை அவதூறாகப் பேசி, தாக்கினராம்.

இதுகுறித்து கனகமணி அளித்தப் புகாரின் பேரில், வீரவநல்லூா் காவல் உதவி ஆய்வாளா் உலகபாண்டியன் வழக்குப் பதிவு செய்து வெள்ளைத்துரை, லட்சுமி இருவரையும் கைதுசெய்தாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com