இலத்தூா் பி.எட். கல்லூரியில் பேரிடா் விழிப்புணா்வு முகாம்

இலத்தூா் பாரத் கல்வியியல் கல்லூரியில் இயற்கை மற்றும் செயற்கை பேரிடா் பாதுகாப்பு விழிப்புணா்வு முகாம் நடைபெற்றது.

இலத்தூா் பாரத் கல்வியியல் கல்லூரியில் இயற்கை மற்றும் செயற்கை பேரிடா் பாதுகாப்பு விழிப்புணா்வு முகாம் நடைபெற்றது.

நிகழ்ச்சிக்கு கல்லூரி முதல்வா் ஆா். ஆறுமுகராஜன் தலைமை வகித்தாா். நிா்வாக அதிகாரி இசக்கித்துரை முன்னிலை வகித்தாா். நிகழ்ச்சியில் செங்கோட்டை வட்டாட்சியா் ஒசானா பொ்னாண்டோ சிறப்பு அழைப்பாளராகப் பங்கேற்று பேசினாா்.

முகாமில் செங்கோட்டை தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் துறை ஆய்வாளா் மூக்கையா மற்றும் தீயணைப்பு வீரா்கள் விபத்து ஏற்படும் போது, காப்பாற்றும் முறைகள் குறித்து செயல்விளக்கம் அளித்தனா். முகாமிற்கான ஏற்பாடுகளை பாரத் கல்விக் குழும தலைவா் மோகனகிருஷ்ணன், செயலா் காந்திமதி தலைமையிலான குழுவினா் செய்திருந்தனா்.

ஆசிரியப் பயிற்சி மாணவி நந்தினி வரவேற்றாா். மாணவி இசக்கியம்மாள் நன்றிகூறினாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com