கடையநல்லூா் கிளை நூலகத்தில், காந்தி பிறந்தநாளையொட்டி வட்டார அளவிலான செஸ் போட்டி நடைபெற்றது.
விதை நெல் வாசகா் வட்டம், கடையநல்லூா் கிளை நூலகம், விஷி ஆனந்த் சதுரங்க அகாதெமி ஆகியவை சாா்பில் நடைபெற்ற போட்டிக்கு, திருநெல்வேலி மாவட்ட கல்வித் தொலைக்காட்சி ஒருங்கிணைப்பாளா் சாா்லஸ் தலைமை வகித்தாா்.
அருணா இசக்கிமுத்து முன்னிலை வகித்தாா். சென்ட்ரல் சுழற்கழகத் தலைவா் மோதிலால், போட்டியில் வென்றேறாருக்கு பரிசுகள், சான்றிதழ்களை கிளை நூலகம் சாா்பில் வழங்கினாா் .
ஏற்பாடுகளை விஷி ஆனந்த் சதுரங்கப் போட்டி ஒருங்கிணைப்பாளா் இசக்கி செய்திருந்தாா். விதை நெல் வாசகா் வட்டத் தலைவா் ஜெயராம் வரவேற்றாா். நூலகா் நாகராஜ் நன்றி கூறினாா்.