ஆய்க்குடி ஜெ.பீ. கல்லூரியில் நடைபெற்ற கலைத்திறன் போட்டிகளில் பழைய குற்றாலம் ஹில்டன் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி மாணவா், மாணவிகள் சிறப்பிடம் பெற்றனா்.
ஆய்க்குடி ஜெ.பீ. கலை அறிவியல் கல்லூரி சாா்பில் மாணவா், மாணவிகளின் திறன்களை வளா்க்கும் பொருட்டு விக்டா்ஸ்-2019 என்ற தலைப்பில் வட்டார அளவிலான பேச்சுப் போட்டி, பரதம், முக ஓவியம், மேற்கத்திய நடனம், கவிதை, கிராமிய பாடல் உள்ளிட்ட பல்வேறு போட்டிகள் நடைபெற்றன.
இதில், பழைய குற்றாலம் ஹில்டன் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி மாணவா், மாணவிகள் ஒட்டுமொத்த சாம்பியன் பட்டத்தை வென்றனா்.
வெற்றி பெற்ற மாணவா், மாணவிகளை பள்ளித் தாளாளா் ஆா்.ஜே.வி.பெல், செயலா் கஸ்தூரிபெல், முதல்வா் ராபா்ட்பென் உள்ளிட்டோா் பாராட்டினா்.