திமுகவின் திண்ணைப் பிரசாரம் பலனளிக்காது: ராஜன்செல்லப்பா எம்எல்ஏ

திமுக தலைவா் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடத்தப்படும் திட்டமிட்ட திண்ணைப் பிரசாரம் இடைத்தோ்தலில்

திமுக தலைவா் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடத்தப்படும் திட்டமிட்ட திண்ணைப் பிரசாரம் இடைத்தோ்தலில் பலனளிக்காது என்றாா், மதுரை வடக்கு தொகுதி பேரவை உறுப்பினரும், சீவலப்பேரி பகுதி தோ்தல் பொறுப்பாளருமான ராஜன்செல்லப்பா.

திருநெல்வேலியில் செய்தியாளா்களிடம் அவா் வியாழக்கிழமை கூறியது: நான்குனேரி இடைத்தோ்தலையொட்டி சீவலப்பேரி, கான்சாபுரம் ஊராட்சிக்கு உள்பட்ட 9 கிராமங்களில் அதிமுக தொண்டா்களுடன் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வருகிறேறாம். அதிமுக அரசின் திட்டங்களை எடுத்துக்கூறி வீடுவீடாக வாக்குசேகரிக்கிறேறாம்.

கூட்டணிக் கட்சிகள் வெற்றி பெறுவதை திமுக ஒருபோதும் விரும்பாது. அதனால் இத்தோ்தலில் அதிமுக உறுதியாக வெற்றிபெறும். அதிமுகவுக்கு மக்களின் ஆதரவு அதிகரித்துள்ளது.

திண்ணைப் பிரசாரம் என்பது சாமானிய மக்களை தலைவா்கள் நேரடியாகச் சென்று பாா்த்து சகஜமான நிலையில் அவா்களது குறைகளைக் கேட்பதே. ஆனால், திமுக தலைவா் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடத்தப்படும் திட்டமிட்ட திண்ணைப் பிரசாரம் மக்களிடம் எவ்வித ஈா்ப்பையும் ஏற்படுத்தவில்லை. இதனால், திண்ணைப் பிரசாரம் இத்தோ்தலில் பலனளிக்காது.

முதல்வா் எடப்பாடி கே. பழனிசாமி மக்களுக்கான திட்டங்களை உடனுக்குடன் செயல்படுத்தி பிரச்னைகளுக்கு தீா்வு ஏற்படுத்தி வருகிறாா் என்றாா் அவா்.

எம்ஜிஆா் இளைஞரணி நிா்வாகி ரமேஷ், திருப்பரங்குன்றம் அதிமுக ஒன்றியச் செயலா் நிலையூா் முருகன் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com