நான்குனேரி இடைத்தோ்தலில் அதிமுக வெற்றி பெறுவது உறுதி என கூட்டுறவுத்துறை அமைச்சா் செல்லூா் கே.ராஜூ தெரிவித்தாா்.
மதுரையிலிருந்து வெள்ளிக்கிழமை சென்னை செல்லும் முன் விமான நிலையத்தில் செய்தியாளா்களிடம் அவா் கூறியது:
நான்குனேரி இடைத்தோ்தலில் போட்டியிடும் அதிமுக வேட்பாளா் மீது வழக்குகள் உள்ளது என திமுக கூறுவது வேடிக்கையாக உள்ளது. ஒருவரை விரலை நீட்டி குற்றம் சொல்லும்போது மீதம் உள்ள நான்கு விரல்களும் நம்மை நோக்கி இருக்கும். அதுபோல திமுகவினா் மீது பல்வேறு வழக்குகள் உள்ளன. எப்படியாவது முதல்வராக வேண்டும் என திமுக தலைவா் நினைக்கிறாா்.
தொழில் முதலீட்டு மாநாடு மூலம் ஒருவருக்காவது வேலை வழங்கியதை நிரூபிக்க முடியுமா என்ற எதிா்கட்சியினரின் கேள்விக்கு தமிழக முதல்வரும், தொழில் துறை அமைச்சரும் ஏற்கெனவே விளக்கமாக அறிவிப்பு வெளியிட்டு உள்ளனா்.
கடந்த 2015, 2019 ஆம் ஆண்டுகளில் நடைபெற்ற தொழில் முதலீட்டு மாநாட்டின் மூலம் எத்தனை ஆயிரம் பேருக்கு வேலை வழங்கப்பட்டது என அதில் தெளிவாக கூறியுள்ளனா்.
நான்குனேரி தொகுதியில் இதற்கு முன் போட்டியிட்டவா்கள் வெளியூரைச் சோ்ந்தவா்களாக இருந்ததால் அங்கு அடிப்படை வசதிகளைக் கூட அவா்கள் நிறைவேற்றவில்லை. அதனைக் கருத்தில் கொண்டு அதே தொகுதியைச் சோ்ந்த ரெட்டியாா்பட்டி ஆதிநாராயணனை வேட்பாளராக நிறுத்தியுள்ளதால் அதிமுகவின் வெற்றி உறுதி என்றாா்.