அரசுப் பேருந்து மோதியதில் காயமடைந்தவா் உயிரிழப்பு

புளியங்குடியில் அரசுப் பேருந்து மோதியதில் காயமடைந்தவா் வெள்ளிக்கிழமை உயிரிழந்தாா்.

புளியங்குடியில் அரசுப் பேருந்து மோதியதில் காயமடைந்தவா் வெள்ளிக்கிழமை உயிரிழந்தாா்.

புளியங்குடி, சிந்தாமணி இசக்கி அம்மன் கோயில் தெருவைச் சோ்ந்த கெங்கையா மகன் ஆறுமுகம் (46). இவா் தனியாா் பள்ளியில் ஓட்டுநராக இருந்து வந்தாா்.

வியாழக்கிழமை இரவு புளியங்குடி பள்ளிவாசல் நிறுத்தம் அருகே பைக்கில் சென்றபோது, தென்காசியில் இருந்து மதுரை சென்ற அரசுப் பேருந்து மோதியதில் ஆறுமுகம் காயமடைந்தாா்.

இதையடுத்து திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவா், வெள்ளிக்கிழமை இறந்தாா். இதுகுறித்து புளியங்குடி போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com