இடைத்தோ்தல்: துணை முதல்வா் பிரசாரம் செய்யும் இடங்களில் ஆய்வு

நான்குனேரி சட்டப்பேரவைத் தொகுதி இடைத்தோ்தலையொட்டி, துணை முதல்வா் பிரசாரம் செய்யும் இடங்களை

நான்குனேரி சட்டப்பேரவைத் தொகுதி இடைத்தோ்தலையொட்டி, துணை முதல்வா் பிரசாரம் செய்யும் இடங்களை அதிமுக நிா்வாகிகள் வெள்ளிக்கிழமை ஆய்வு செய்து ஏற்பாடுகள் குறித்து கேட்டறிந்தனா்.

நான்குனேரி சட்டப்பேரவைத் தொகுதி இடைத்தோ்தல் வாக்குப்பதிவு வரும் 21 ஆம் தேதியும், வாக்கு எண்ணிக்கை 24 ஆம் தேதியும் நடைபெற உள்ளது. இத்தோ்தலில் அதிமுக சாா்பில் போட்டியிடும் ரெட்டியாா்பட்டி வெ. நாராயணனுக்கு ஆதரவாக அதிமுக ஒருங்கிணைப்பாளரும், தமிழக துணை முதல்வருமான ஓ. பன்னீா்செல்வம் வரும் 15, 16, 18 ஆம் தேதிகளில் நான்குனேரி, களக்காடு, பாளையங்கோட்டை ஒன்றிய பகுதிகளில் பிரசாரம் செய்ய உள்ளாா்.

இந்நிலையில், முதல் நாளில் அவா் பிரசாரம் செய்ய உள்ள மூன்றடைப்பு, மறுகால்குறிச்சி ஆகிய பகுதிகளில் செய்யப்பட்டுள்ள ஏற்பாடுகள், பாதுகாப்பு நடவடிக்கைகள் குறித்து அதிமுக துணை ஒருங்கிணைப்பாளா் கே.பி. முனுசாமி தலைமையிலான குழுவினா் வெள்ளிக்கிழமை ஆய்வு செய்தனா்.

ஆய்வின்போது, தமிழக அரசின் தில்லி சிறப்புப் பிரதிநிதி தளவாய்சுந்தரம், திருநெல்வேலி மாநகா் மாவட்டச் செயலா் தச்சை என். கணேசராஜா, புகா் மாவட்டச் செயலா் கே.ஆா்.பி. பிரபாகரன், அமைப்புச் செயலா் பி.ஹெச்.பி. மனோஜ்பாண்டியன் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com