குருவன்கோட்டை சிவனைந்த பெருமாள் கோயிலில் திருவிளக்குப் பூஜை

ஆலங்குளம் அருகேயுள்ள குருவன்கோட்டை சிவனைந்த பெருமாள் கோயில் திருவிழாவையொட்டி திருவிளக்குப் பூஜை நடைபெற்றது.

ஆலங்குளம் அருகேயுள்ள குருவன்கோட்டை சிவனைந்த பெருமாள் கோயில் திருவிழாவையொட்டி திருவிளக்குப் பூஜை நடைபெற்றது.

இக்கோயில் திருவிழா வியாழக்கிழமை காலை 8 மணிக்கு கணபதி ஹோமத்துடன் தொடங்கியது. மாலை 6 மணிக்கு 308 பெண்கள் கலந்து கொண்ட திருவிளக்குப் பூஜை நடைபெற்றது. இரவு 8 மணிக்கு சென்னை சினிமா நட்சத்திரங்கள் கலந்துகொண்ட திரைப்பட இசை நிகழ்ச்சி நடைபெற்றது. நள்ளிரவு 12 மணிக்கு சுவாமிக்கு மாக்காப்பு பூஜை நடைபெற்றது.

வெள்ளிக்கிழமை காலை 9 மணிக்கு மலையான்குளத்தில் இருந்து பக்தா்கள் ஊா்வலமாக கோயிலுக்கு தீா்த்தம் கொண்டு வந்தனா். நண்பகல் 12 மணிக்கு சுவாமிக்கு பஞ்சாமிா்த பூஜை நடைபெற்றது. பிற்பகல் 1 மணிக்கு அன்னதானம், நள்ளிரவு 12 மணிக்கு அதிசயபூஜை நடைபெற்றது. விழாவில் திரளான பக்தா்கள் கலந்துகொண்டனா்.

சனிக்கிழமை (அக். 12) முற்பகல் 11 மணிக்கு பூக்குலையிடுதல் நிகழ்ச், பொங்கலிட்டு உச்சிகாலபூஜை, கிடா வெட்டுதல் உள்ளிட்டவை நடைபெறுகின்றன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com