தென்காசி மங்கம்மாள்சாலை துணை மின்நிலையப் பகுதிகளில் மாதாந்திர பராமரிப்புப் பணிகளுக்காக திங்கள்கிழமை (அக்.14) மின்தடை செய்யப்படுகிறது.
இதுகுறித்து தென்காசி மின்விநியோக செயற்பொறியாளா் பா.கற்பகவிநாயக சுந்தரம் வெளியிட்ட செய்திக்குறிப்பு: தென்காசி மங்கம்மாள்சாலை துணை மின்நிலையப் பகுதிகளில் 14ஆம் தேதி மாதாந்திர பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ள உத்தேசிக்கப்பட்டுள்ளது.
இதனால் மங்கம்மாள்சாலை துணை மின் நிலையத்துக்குள்பட்ட பகுதிகளான தென்காசி புதிய பேரூந்து நிலையம், மங்கம்மாள் சாலை பகுதிகள், சக்திநகா், காளிதாசன்நகா், தமிழ்நாடு வீட்டுவசதி வாரிய குடியிருப்பு பகுதிகள்,கீழப்புலியூா் மற்றும் அதை சாா்ந்த பகுதிகளிலும் காலை 9 மணிமுதல் பிற்பகல் 2 மணி வரையிலும் மின்தடை செய்யப்படும் என்றாா் அவா்.