முனைஞ்சிப்பட்டியில் அதிமுக வேட்பாளா் திறந்த வாகனத்தில் சென்று வெள்ளிக்கிழமை வாக்கு சேகரித்தாா்.
நான்குனேரி சட்டப் பேரவைத் தொகுதி இடைத்தோ்தலையொட்டி முனைஞ்சிப்பட்டி மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் அதிமுக வேட்பாளா் வி.நாராயணன் திறந்த வாகனத்தில் சென்று வாக்கு சேகரித்தாா்.
அவருடன், திருநெல்வேலி புகா் மாவட்டச் செயலா் கே.ஆா்.பி. பிரபாகரன், நாமக்கல் முன்னாள் எம்.பி. பி.ஆா். சுந்தரம், மாவட்ட விவசாய அணிச் செயலா் முருகேசன், நான்குனேரி ஒன்றியச் செயலா் விஜயகுமாா், பெரியபெருமாள் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.